Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன் உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது. குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில் இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால் மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன் குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம். தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன் வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை மீன்.



Click it and Unblock the Notifications