Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன் உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது. குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில் இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால் மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன் குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம். தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன் வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை மீன்.



Click it and Unblock the Notifications











