Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன் உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது. குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில் இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால் மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன் குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம். தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன் வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை மீன்.



Click it and Unblock the Notifications