Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
No Tomato No Onion Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு கார சட்னி அரைக்க சென்றால், வெங்காயம், தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வெங்காயம் தக்காளி இல்லாமலேயே சுவையான கார சட்னியை செய்யலாம்.
இந்த கார சட்னிக்கு பூண்டு இருந்தாலே போதுமானது. இந்த கார சட்னியை செய்தால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது. அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல் வெளியில் வைத்தே 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - எலுமிச்சை அளவு
* பூண்டு - 30 பல்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வர மல்லி - 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 துண்டு
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, ஓரளவு கெட்டியாக சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, அரைத்த வர மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, குறைவான
தீயில் வைத்து, 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லத்தை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால்
உப்பையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications