Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
No Tomato No Onion Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு கார சட்னி அரைக்க சென்றால், வெங்காயம், தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வெங்காயம் தக்காளி இல்லாமலேயே சுவையான கார சட்னியை செய்யலாம்.
இந்த கார சட்னிக்கு பூண்டு இருந்தாலே போதுமானது. இந்த கார சட்னியை செய்தால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது. அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல் வெளியில் வைத்தே 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - எலுமிச்சை அளவு
* பூண்டு - 30 பல்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வர மல்லி - 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 துண்டு
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, ஓரளவு கெட்டியாக சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, அரைத்த வர மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, குறைவான
தீயில் வைத்து, 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லத்தை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால்
உப்பையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











