Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
No Tomato No Onion Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு கார சட்னி அரைக்க சென்றால், வெங்காயம், தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வெங்காயம் தக்காளி இல்லாமலேயே சுவையான கார சட்னியை செய்யலாம்.
இந்த கார சட்னிக்கு பூண்டு இருந்தாலே போதுமானது. இந்த கார சட்னியை செய்தால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது. அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல் வெளியில் வைத்தே 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - எலுமிச்சை அளவு
* பூண்டு - 30 பல்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வர மல்லி - 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 துண்டு
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, ஓரளவு கெட்டியாக சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, அரைத்த வர மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, குறைவான
தீயில் வைத்து, 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லத்தை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால்
உப்பையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











