Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
Nellore Kaaram Dosa Recipe In Tamil: பெரும்பாலானோரின் வீடுகளில் காலை உணவு இட்லி அல்லது தோசையாகவே இருக்கும். ஏனெனில் இது தான் ஈஸி மற்றும் சத்தானதும் கூட. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் அது அலுத்துப்போய்விடும். உங்களுக்கும் அப்படி அலுத்துப்போய்விட்டதா? இன்று உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா?
அப்படியானால் வெறும் தோசையை சுடுவதற்கு பதிலாக, ஒருமுறை நெல்லூர் கார தோசையை செய்யுங்கள். இந்த தோசை அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இதற்கு தேங்காய் சட்னி இருந்தாலே போதும், கணக்கில்லாமல் வீட்டில் உள்ளோர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

உங்களுக்கு நெல்லூர் கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* தக்காளி - 1
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* தோசை மாவு
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் காஷ்மீரி வரமிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம்,
பூண்டு, சீரகம், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம்
வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக்
கொண்டு தோசை ஊற்றி, அதன் நடுவே ஒரு ஸ்பூன் அரைத்த காரத்தை வைத்து
பரப்பி விட்டு, எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வேக வைத்து, அப்படியே மடித்து
எடுத்தால், சுவையான நெல்லூர் காரம் தோசை தயார்.
* ஒருவேளை உங்களுக்கு முட்டை தோசை தான் வேண்டுமென்றால், தோசையை ஊற்றி,
பின் முட்டையை நடுவே உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் காரத்தை வைத்து
அப்படியே பரப்பி விட்டு, எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து,
அடிப்படியே மடித்து எடுத்தால், முட்டை தோசை தயார்.
Image Courtesy: Archana's Kitchen



Click it and Unblock the Notifications






