Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
நாவூற வைக்கும்... நெய்மீன் கருவாடு தொக்கு
கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.
கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. இதன் மணம் வேண்டுமானால் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.

இப்போது அந்த நெய்மீன் கருவாடு கொண்டு எப்படி தொக்கு செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சுவையான... மட்டன் கைமா கிரேவி
தேவையான பொருட்கள்:
* நெய்மீன் கருவாடு - 2 துண்டு
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 1/8 கப் (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதே சமயம் மறுபுறம் கருவாட்டை கழுவி, வெதுவெதுப்பான நீரில் கருவாடை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிடவும்.
* பின் வாணலியில் கழுவிய கருவாடை போட்டு, அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் கருவாடு மூழ்கும் வரை நீரை ஊற்ற வேண்டும்.
* பின்பு நன்கு கிளறவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து, கருவாடு வெந்துள்ளதா என்பதை கரண்டியால் அழுத்தி பார்க்க வேண்டும். கருவாடு மென்மையாக இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
* இப்போது கருவாட்டில் உள்ள நடுமுள்ளை நீக்கிவிட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு வற்றிவிட்டால், சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications