Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
இட்லி, தோசைக்கு இந்த கூரைக்கடை தண்ணி சட்னியை செய்யுங்க.. தொட்டு சாப்பிடாம ஊத்தி குடிப்பாங்க...
Thanni Chutney Recipe In Tamil: காலை வேளையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை கூரைக்கரை தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த தண்ணி சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அதோடு இந்த சட்னியை செய்தால், தொட்டு சாப்பிடாமல் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.

உங்களுக்கு தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* தேங்காய் - 1/4 கப்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 5-6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை துண்டுகளாக்கி சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை, தேங்காய்,
புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் அவற்றைப்
போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை அரைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
