Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
புரட்டாசி ஸ்பெஷலா வீட்டுல ஒருடைம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீராவை செஞ்சு பாருங்களேன்..
Navratri 2024 Special Srirangam Jeera Recipe In Tamil: நவராத்திரி தொடங்கிவிட்டது. பலர் வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். அப்படி கொலு வைத்துள்ள வீடுகளில் மாலை வேளையில் பிரசாதம் ஏதாவது செய்து படைத்து, வீட்டிற்கு வருவோருக்கு வழங்குவார்கள். உங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளீர்களா?
மாலையில் என்ன பிரசாதம் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மாலையில் சுண்டல் செய்து, அத்துடன் ஸ்ரீரங்கம் கோவிலில் கொடுக்கும் பிரசாதமான ஜீராவையும் செய்யுங்கள். இந்த ஜீரா கேசரி போன்று காணப்பட்டாலும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீராவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீரா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்கண்டு - 1 கப்
* தண்ணீர் - 2 1/4
* ரவை - 1 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் - மிகச்சிறிய துண்டு
(குறிப்பு: 1 கப் என்பது எந்த கப்பில் ரவையை எடுக்கிறீர்களோ, அதே கப்பில் அனைத்து பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.)
செய்முறை:
* முதலில் கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 2 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து
நன்கு சூடேற்ற வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், அதில் ரவையை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் கொதித்துக் கொண்டிருக்கும் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக
ஊற்றி நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கரையும் வரை
கிளறி விட வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள கற்கண்டை
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் பச்சை
கற்பூரத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ஸ்ரீரங்கம் ஜீரா
தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications









