Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாட்டுக்கோழி சூப்
சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலுக்கு தெம்பாகவும் இருக்கும். உங்களுக்கு நாட்டுக்கோழி சூப் பிடிக்குமா?
சூப் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக சூப்பானது ஒரு நாளின் எந்நேரம் வேண்டுமானாலும் குடிக்க ஏற்றது. சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து சூப்புகளுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை. ஆனால் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் சூப் என்றால் அது நாட்டுக்கோழி சூப் தான். அதிலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது என்றே கூற வேண்டும். இதற்கு இதில் சேர்க்கப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்கள் தான்.
சொல்லப்போனால் சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலுக்கு தெம்பாகவும் இருக்கும். உங்களுக்கு நாட்டுக்கோழி சூப் பிடிக்குமா? ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே நாட்டுக்கோழி சூப்பின் மிகவும் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி - 1/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கப்
* தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.
* குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!