Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
நாகபஞ்சமி ஸ்பெஷல் வரகரிசி பாயாசம் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்!
Varagarisi Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தமிழ்நாட்டில் கடவுள் வழிபாட்டிற்கு உரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அதில் பல விசேஷ நாட்கள் கோலாகலமாக கோவில்கள் மற்றும் வீட்டில் என கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் நாளை(28-07-2025) செவ்வாய் கிழமை நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி கொண்டப்படுகிறது. ஆனால் இந்த நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாகர்களிடம் அடிமையாக இருந்த கருடர் அவர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளாக கொண்டப்படுகிறது. வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்ற தடைகளை சந்திப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். சரி வாங்க இந்த நாளில் நெய்வேத்தியமாக எப்படி வரகு அரிசி பாயசம் செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
- வரகு - ¼ கப்
- ஜவ்வரிசி - ½ கப்
- பால் - 2 கப்
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 4
- ஏலக்காய் - 2
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1½ கப்
- பாதாம் - 5
- பிஸ்தா - 5
- உப்பு - 1 சிட்டிகை
வறுக்க:
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 12
- முந்திரி - 6
செய்முறை:
- முதலில் வரகு அரிசியை சுத்தமாக தண்ணீரில் அலசி குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- பின் வரகு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- பாலை காய்ச்சி நன்றாக சூடு ஆறும் வரை ஆற விடவும்.
- தேங்காயை துருவி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தனியே எடுத்து கொள்ளவும்.
- ஏலக்காய், முந்திரி மற்றும் மீதம் இருக்கும் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
- சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காயவிடவும்.
- பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே நெய்யில் உலர்திராட்சையை சேர்த்து பலூன் போல் பெரிதானதும் எடுத்து ஆறவிடவும்.
- பின் பாதம் மற்றும் பிஸ்தாவை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
-அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்ததும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின் அதை மண் மற்றும் தூசி இல்லாமல் வடித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதை வேக வைத்து ஆற வைத்த வரகரிசி மற்றும் ஜவ்வரிசியுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் பால், காய்ச்சி ஆற வைத்த பால், தனியாக எடுத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கடைசியாக நெயில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான வரகு அரிசி பாயசம் ரெடி!
- அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மீது நறுக்கிய பாதம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து பரிமாறலாம்.
- பாதம் மற்றும் பிஸ்தா இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications










