இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒரு டைம் இந்த மைசூர் சட்னியை செஞ்சு பாருங்க..

Posted By:

Mysore Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மைசூர் சட்னியை ட்ரை செய்யுங்கள்.

இந்த மைசூர் சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இதை செய்வதற்கு வீட்டில் உள்ள சில சிம்பிளான பொருட்களே போதுமானது.

Mysore Chutney How To Make a Mysore Chutney Recipe

உங்களுக்கு மைசூர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2
* புதினா - 1 கைப்பிடி
* எள்ளு - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மல்லி விதைகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து ஓரளவு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா, எள்ளு விதைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய தேங்காய் மற்றும் புளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மைசூர் சட்னி தயார்.

Image Courtesy: NSK Taste 'n' Treat

[ of 5 - Users]
Story first published: Thursday, June 20, 2024, 7:07 [IST]
Desktop Bottom Promotion