Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
மணமணக்கும்... செட்டிநாடு மட்டன் உப்புக்கறி - எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Mutton Uppu Kari Recipe In Tamil: உங்கள் வீட்டில் மட்டன் வாங்கினால் எப்போதும் ஒரே மாதிரி குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? அவ்வப்போது மட்டனைக் கொண்டு சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் தான், மட்டன் போர் அடிக்காமல் இருக்கும்.
அதுவும் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மட்டன் வாங்கினால், வெறும் குழம்பு மட்டும் செய்யாமல், சிறிது மட்டனைக் கொண்டு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியையும் செய்யுங்கள். இது நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் உப்புக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* வரமிளகாய் - 15
* பட்டை - 1 துண்டு
* பூண்டு - 12 பற்கள்
* சின்ன வெங்காயம் - 30 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கல் உப்பு - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத மட்டன் நன்கு நீரில் கழுவி சிறுசிறு
துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பிறகு அதல் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* தக்காளி வதங்கியதும், அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம்
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து 40 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 40 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மட்டனில் உள்ள நீர்
முற்றிலும் வற்றும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன்
உப்புக்கறி தயார்.



Click it and Unblock the Notifications