Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மட்டன் குழம்பை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. எப்பவும் இப்படி தான் செய்வீங்க..
Mutton Kuzhambu Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே, காலையில் இட்லி மட்டன் குழம்பு சாப்பிட்டால் தான், அந்த நாளே சிறப்பாக இருக்கும். அதனால் தான் பெரும்பாலானோரின் வீட்டில் ஞாயிற்றுக் கிழமை இட்லி, மட்டன் குழம்பு செய்யப்படுகிறது. இன்று காலை உங்கள் வீட்டிலும் இது தான் மெனுவா?
அப்படியானால் மட்டன் குழம்பை வைப்பதாக இருந்தால், வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மசாலா பொடியை தயாரித்து செய்யுங்கள். இப்படி மட்டன் குழம்பை செய்யும் போது, அது இட்லிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி மட்டன் குழம்பை ஒருமுறை செய்தால், பின் எப்போதும் இந்த மாதிரி தான் மட்டன் குழம்பை செய்வீர்கள்.

உங்களுக்கு மசாலா பொடி அரைத்து மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* பாதாம் - 10
* முந்திரி - 10
* ஜாவித்திரி - 1
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 3
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 750 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதாம், முந்திரி,
ஜாவித்திரி, கசூரி மெத்தி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் காஷ்மீரி
வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் செய்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், அரைத்த பொடி, மிளகாய் தூள், கரம்
மசாலா சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications


