Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
மட்டன் கறி உருண்டை குழம்பு ரெசிபி... இந்த மாதிரி ஒரு தடவ செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்...!
Mutton Kari Urundai Kulambu Recipe in Tamil: அசைவ உணவு வகைகள் பெரும்பாலானவர்களின் விருப்பமான உணவு. அதில் பறப்பது, நடப்பது, நீந்துவது, ஏன் ஊர்வதை கூட சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் இருந்தாலும் அதில் மீன், சிக்கன், மற்றும் மட்டன் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது.
மட்டன் வைத்து நாமும் விதவிதமாக குழம்பு, வறுவல் என செய்திருப்போம். மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்ப உணவுகளில் ஒன்று. ஆனால் இப்படி மட்டன் கோலா உருட்டை வைத்து ஒரு முறை குழம்பு செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:
உருண்டை செய்ய:
- கொத்திய ஆட்டுக்கறி - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியதைப் பயன்படுத்தவும்)
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- சோம்புத் தூள் - ½ டீஸ்பூன்
- பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
- முட்டை - 1
- பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கவும்)
- பூண்டு - 4 பல் (நறுக்கவும்)
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - பொரிப்பதற்கேற்ப
குழம்பு செய்ய:
- பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)
- இஞ்சி பூண்டு விழுது - 1 ½ டேபிள்ஸ்பூன்
- பெரிய தக்காளி - 2 (நறுக்கவும்)
- சாம்பார் மிளகாய்த் தூள் - 1 ½ டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- புதினா இலை - ¼ கப்
- தேங்காய்ப் பால் - 1 கப்
- கொத்தமல்லி இலை - ¼ கப்
- கிராம்பு - 3
- பட்டை - 1 துண்டு (சுமார் 1 அங்குலம்)
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 2
செய்முறை:
உருண்டை தயார் செய்ய:
- ஆட்டுக்கறியை சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக
கழுவிஎடுத்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய்
சேர்க்கவும்.
- பின் மஞ்சள் தூள், சோம்புத் தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு,
மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து
வைக்கவும்.
குழம்பு தயார் செய்ய:
- வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு,
பட்டை, மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மற்றும்
கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் சாம்பார் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான
அளவு உப்பு சேர்த்து கிளறி வதக்கவும்.
- மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்து 5
நிமிடம் கொதிக்க விடவும்.
- பின் பொரித்து வைத்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில்
கொதிக்க விடவும்.
- கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மட்டன்
கறி உருண்டை குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
