Just In
- 4 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 5 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 5 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 6 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவையான... மட்டன் நெய் சோறு
நாம் அனைவருமே நெய் சோறு சுவைத்திருப்போம். பொதுவாக நெய் சோறு செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவியைத் தொட்டுக் கொள்வோம். ஆனால் இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.
மட்டன் நெய் சோறுக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் அது வெங்காய பச்சடி தான். இப்போது மட்டன் நெய் சோறு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 5
* பட்டை - 1 சிறு துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 2 துண்டு
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6-7 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2-3 கப்
* நெய் - 1/4 கப்
* முந்திரி - ஒரு கையளவு
* உலர் திராட்சை - சிறிது
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா இலைகள் - 1 கப்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் மட்டனை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்கவும். இப்போது குக்கரில் ஒரு கப் அளவு நீர் இருக்கும். அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு 5 நிமிடம் உயர் வெப்பநிலையில் நன்கு நீரைக் கொதிக்க விடவும். பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதை குக்கரில் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் நெய் சோறு தயார்.