Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சுவையான... மட்டன் நெய் சோறு
இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.
நாம் அனைவருமே நெய் சோறு சுவைத்திருப்போம். பொதுவாக நெய் சோறு செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவியைத் தொட்டுக் கொள்வோம். ஆனால் இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

மட்டன் நெய் சோறுக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் அது வெங்காய பச்சடி தான். இப்போது மட்டன் நெய் சோறு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 5
* பட்டை - 1 சிறு துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 2 துண்டு
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6-7 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2-3 கப்
* நெய் - 1/4 கப்
* முந்திரி - ஒரு கையளவு
* உலர் திராட்சை - சிறிது
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா இலைகள் - 1 கப்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் மட்டனை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்கவும். இப்போது குக்கரில் ஒரு கப் அளவு நீர் இருக்கும். அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு 5 நிமிடம் உயர் வெப்பநிலையில் நன்கு நீரைக் கொதிக்க விடவும். பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதை குக்கரில் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் நெய் சோறு தயார்.



Click it and Unblock the Notifications










