Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 12 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முருங்கைக் கீரை சூப்
உங்களுக்கு மாலை வேளையில் சூப் ஏதேனும் செய்து சுவைக்க வேண்டுமானால், முருங்கைக்கீரை சூப் சிறப்பான தேர்வு. குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப்பை கொடுப்பது மிகவும் நல்லது.
சூப்புகளில் முருங்கைக்கீரை சூப் செய்வது மிகவும் சுலபம். முருங்கைக்கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. அதோடு முருங்கைக்கீரை கண்களுக்கும் நல்லது.
உங்களுக்கு மாலை வேளையில் சூப் ஏதேனும் செய்து சுவைக்க வேண்டுமானால், முருங்கைக்கீரை சூப் சிறப்பான தேர்வு. குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப்பை கொடுப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு முருங்கைக்கீரை சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
MOST READ: மீல் மேக்கர் மஞ்சூரியன்
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருங்கைக்கீரை சூப்பின் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியைப் படித்து முயற்சித்துவிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 1 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரையை நீரில் இரண்டு முறை நன்கு அலசி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின் வதக்கியதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
* சூப்பானது நன்கு கொதித்த பின், சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, பின் மிளகுத் தூள் தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.
குறிப்பு:
* 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப் கொடுப்பதாக இருந்தால், சூப்பை வடிகட்டி, வெறும் நீரை மட்டும் கொடுக்கலாம்.
* முருங்கைக்கீரையை அரைத்து பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் சூப் கசப்பாக இருக்கும்.
* முருங்கைக்கீரையை எப்போதுமே மரத்தில் இருந்து பிடுங்கிய அன்றே அல்லது மறுநாள் பயன்படுத்திவிட வேண்டும்.
* இன்னும் சுவையான முருங்கைக்கீரை சூப் வேண்டுமானால், இத்துடன் 1/4 கப் தேங்காய் பால் அல்லது பருப்பு வேக வைத்த நீரை சேர்த்துக் கொள்ளலாம்.