Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முருங்கைக்கீரை கூட்டு
பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?
கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?
கீழே முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* சாம்பார் பவுடர் - 1/2 டீபூன்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/8 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீபூன்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* எண்ணெய் - 2 டீபூன்
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 1/2 டேபிள் பூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு, 1 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீர் சேர்த்து, மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளியைப் போட்டு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து, கீரை நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* கீரை நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் சற்று மாறியிருக்கும். இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்ர்த்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விடவும்.
* மறுபுறம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இறுதியில் தாளித்த கலவையை கீரையுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால், முருங்கைக் கீரை கூட்டு தயார்.
Image Courtesy: sharmispassions