Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
1 கப் மீந்து போன சாதம் இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான முறுக்கு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க.
Leftover Rice Murukku Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் உள்ளதா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு மாலை வேளையில் அட்டகாசமான சுவையில் முறுக்கு சுடுங்கள். இந்த முறுக்கு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி முறுக்கு சுடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதத்தைக் கொண்டு செய்யக்கூடிய முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கருப்பு எள்ளு - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொட்டுக்கடலை பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் சாதத்தை சேர்த்து, நீர் சேர்க்காமல்
மென்மையாக அரைத்து, அதை பொட்டுக்கடலை மாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, கருப்பு எள்ளு
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு ஒமத்தை கைகளால் நசுக்கி, அதையும் சேர்த்து, 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து முறுக்கு அச்சை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து
வைத்துள்ள மாவை எடுத்து, முறுக்கு அச்சினுள் வைத்து, ஒரு துணியை
விரித்து, அதன் மேல் வேண்டிய அளவில் முறுக்குகளை பிழிய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை
சேர்த்து பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான முறுக்கு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications





