Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
முருகன் இட்லி கடை ஸ்பெஷல் தக்காளி சட்னி... எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Murugan Idli Kadai Tomato Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? இட்லிக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் சற்று புளிப்பான சட்னி இன்னும் அற்புதமாக இருக்கும்.
இதனால் நிறைய பேர் இட்லிக்கு தக்காளி சட்னியையே அதிகம் விரும்புவார்கள். இந்த தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம். அதில் மிகவும் பிரபலமான முருகன் இட்லி கடையின் தக்காளி சட்னியின் சுவையே தனி தான். இந்த சட்னியை வீட்டில் செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருகன் இட்லி கடை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருகன் இட்லி கடை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5- பல்
* வரமிளகாய் - 3
* தக்காளி - 1/2 கிலோ (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து பொரியவிட வேண்டும்.
* பின் அதில் உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வெல்லம் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முருகன் இட்லி கடை
தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications