Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
முருகன் இட்லி கடை ஸ்பெஷல் கடுகு சட்னி... சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Murugan Idli Kadai Kadugu Chutney In Tamil: இன்று உங்கள் வீட்டில் காலையில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்யாமல் சற்று சிம்பிளாகவும், வித்தியாசமான சுவையிலும் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் முருகன் இட்லி கடை ஸ்பெஷல் கடுகு சட்னியை ட்ரை பண்ணுங்கள். இந்த கடுகு சட்னி இட்லியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதுமானது. குறிப்பாக காலையில் டக்கென்று ஒரு சட்னி செய்ய நினைத்தால், இந்த சட்னியை செய்யலாம்.

உங்களுக்கு முருகன் இட்லி கடை கடுகு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருகன் இட்லி கடை கடுகு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுந்து - 3 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வரமிளகாய் - 1
* தக்காளி - 2 (நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 3 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின்பு அதில் 2 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, வரமிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி
நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, தாளிக்காமல் அப்படியே
பரிமாறினால், சுவையான கடுகு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications