Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்
மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
வட இந்தியாவில் பாவ் பாஜி, மசாலா பாவ் போன்றவை மிகவும் பிரபலமான சாட் உணவுப் பொருட்கள். இந்த வகை ஸ்நாக்ஸ்களை கடைகளில் தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அவற்றையும் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் தெரியுமா? ஆம், அதிலும் மும்பையில் தெருவோரங்களில் விற்கப்படும் பிரபலமான மசாலா பாவ்வை எளிதில் வீட்டிலேயே செய்யலாம்.

மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பாவ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாவ் பன் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* வெண்ணெய் - 2 டீஸ்பூன் + டோஸ்ட் செய்ய 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
மசாலா பொடிகள்:
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா பொடி - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
அலங்கரிக்க...
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய தோசை தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, உருளைக்கிழங்கு மசிப்பதைக் கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
* இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, தவாவின் ஒரு பக்கமாக தள்ளி வையுங்கள். மறு பக்கத்தில் சிறிது வெண்ணெய் வைத்து, அதன் மேல் பாவ் பன்னை இரண்டாக வெட்டி இரண்டு பக்கத்தையும் லேசாக டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் வெட்டி டோஸ்ட் செய்த பக்கத்தில் மசாலாவைப் பரப்புங்கள். அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து சூடாக பரிமாறினால் சுவையான மசாலா பாவ் தயார்!



Click it and Unblock the Notifications










