Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
1 கைப்பிடி முருங்கைக்கீரை வெச்சு.. ஒருவாட்டி இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Murungai Keerai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் வீட்டில் சட்னி தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை அதிகம் சாப்பிடமாட்டார்களா? அவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் முருங்கைக்கீரை வாங்கினால், அதைக் கொண்டு சட்னியை செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* புளி - 1 துண்டு
* பூண்டு - 2 பல்
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், உளுத்தம்
பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து வறுத்து இறக்கி அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, புளி, பூண்டு மற்றும் தேங்காயை சேர்த்து,
சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முருங்கைக்கீரை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை ஜாரில் பொடித்து வைத்துள்ளதுடன் சேர்த்து, நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முருங்கைக்கீரை சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications