Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மாம்பழ பூரி
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் எங்கும் விலை குறைவில் கிடைப்பதைக் காணலாம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள்.
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் எங்கும் விலை குறைவில் கிடைப்பதைக் காணலாம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு வித்தியசமான சுவையில் இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு நல்ல ப்ளேவருடனும் இருக்கும்.

உங்களுக்கு மாம்பழ பூரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ பூரியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* மாம்பழ கூழ் - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மாம்பழ கூழ், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் விரல்களால் மெதுவாக கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், மாம்பழ பூரி தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு பூரி இனிப்பாக வேண்டுமானால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இதற்கு மேல் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் பூரி எளிதில் கருகிவிடும்.
* மாம்பழ கூழ் சேர்ப்பதால் வழக்கத்தை விட வேகமாக பூரி வெந்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
