Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பார்த்தாலே நாவூறும்.. மணத்தக்காளி வத்தக்குழம்பு - எப்படி சிம்பிளா செய்றது-ன்னு தெரியுமா?
Manathakkali Vaththal Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மணத்தக்காளி வத்தல் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யுங்கள்.
இந்த மணத்தக்காளி வத்தக்குழம்பை செய்தால் குண்டா சோறும் நொடியில் காலியாகிவிடும். முக்கியமாக இந்த குழம்பை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

உங்களுக்கு மணத்தக்காளி வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மணத்தக்காளி வத்தல் - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 200 கிராம்
* நல்லெண்ணெய் - 50 மிலி
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* புளி - 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் மணத்தக்காளி
வத்தலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும்
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி நீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து கிளறி, குழம்பு
பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து, எண்ணெய் பிரியத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்தால், சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











