Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
மதுரை உருளை மசாலா பொட்டலம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Madurai Urulai Masala Pottalam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு பிரியரா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
இந்த உருளைப் பொட்டலம் வழக்கமாக செய்வது போன்ற சுவையில் இல்லாமல், சற்று வித்தியாசமான சுவை மற்றும் மணத்துடன் இருக்கும். இந்த ரெசிபி சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இதை ஒருமுறை செய்தால், அடிக்கடி உங்கள் வீட்டில் செய்வீர்கள்.

உங்களுக்கு மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3/4 கிலோ
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தை இலை
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்துவிட்டு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்ததாக கடலை மாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,
மசாலா அனைத்தும் உருளைக்கிழங்குடன் சேருமாறு ஒரு 4-5 நிமிடம் நன்கு
வதக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தை இலையை எடுத்து, அதை பொட்டலம் போன்று சுருட்டி,
அதனுள் சிறிது உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மடித்து, சணல் அல்லது
நூல் கொண்டு பொட்டலம் கட்டினால், மதுரை உருளை மசாலா பொட்டலம்
தயார்.



Click it and Unblock the Notifications











