Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
மதுரை ரோட்டுக்கடை தண்ணி சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!
Madurai Style Thanni Chutney Recipe in Tamil: மல்லிகை பூ என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது மதுரை தான். மணமணக்கும் மல்லிக்கு பெயர் பெற்ற மதுரைக்கு தூங்க நகரம் என்று ஒரு பெயர் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் நள்ளிரவு நேரத்தில் கூட அங்கு சாப்பிட உணவு வகைகள் கிடைக்கும் என்பதால் தான்.
அங்கு கிடைக்கும் உணவின் சுவையை பற்றி குறிப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள். சைவம் அசைவம் என எதுவும் அருமையான சுவையில் கிடைக்கும். அந்த சைவ உணவுகளின் வரிசையில் பெயர் பெற்ற மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 4
- வரமிளகாய் - 2
- பூண்டு - 7 பல்
- இஞ்சி - சிறிதளவு (½ இஞ்ச் அளவு)
- பெரிய வெங்காயம் - 3
- பொட்டுக்கடலை - ½ கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். அதில் பூண்டை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின் இவற்றை நன்கு ஆற வைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்க்கவும்.
- அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தோல் உரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து பெருங்காயத்தை சேர்த்து கிளறவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்!



Click it and Unblock the Notifications











