Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மதுரை ரோட்டுக்கடை தண்ணி சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!
Madurai Style Thanni Chutney Recipe in Tamil: மல்லிகை பூ என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது மதுரை தான். மணமணக்கும் மல்லிக்கு பெயர் பெற்ற மதுரைக்கு தூங்க நகரம் என்று ஒரு பெயர் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் நள்ளிரவு நேரத்தில் கூட அங்கு சாப்பிட உணவு வகைகள் கிடைக்கும் என்பதால் தான்.
அங்கு கிடைக்கும் உணவின் சுவையை பற்றி குறிப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள். சைவம் அசைவம் என எதுவும் அருமையான சுவையில் கிடைக்கும். அந்த சைவ உணவுகளின் வரிசையில் பெயர் பெற்ற மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 4
- வரமிளகாய் - 2
- பூண்டு - 7 பல்
- இஞ்சி - சிறிதளவு (½ இஞ்ச் அளவு)
- பெரிய வெங்காயம் - 3
- பொட்டுக்கடலை - ½ கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். அதில் பூண்டை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின் இவற்றை நன்கு ஆற வைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்க்கவும்.
- அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தோல் உரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து பெருங்காயத்தை சேர்த்து கிளறவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்!



Click it and Unblock the Notifications