Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வேர்க்கடலை இருக்கா? இப்படி சாதம் செஞ்சு ஸ்கூலுக்கு கொடுங்க.. செமயா இருக்கும்...
Peanut Rice Recipe In Tamil: பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ள பெற்றோர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசனையிலேயே இருப்பார்கள். நீங்களும் அப்படி தான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் வெரைட்டி ரைஸ் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் எலுமிச்சை சாதம், புளி சாதம் செய்து கொடுத்து போரத்துவிட்டதா?
உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலை கொண்டு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள். இந்த வேர்க்கடலை சாதம் மதிய வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஏன், இதை வேலைக்கு செல்பவர்களுக்கும் அலுவலகத்திற்கு கொண்டு செய்யலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்=
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2-3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதை - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் பாசுமதி அரிசியை குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, 2
விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு
தட்டில் போட்டு உலர்த்த வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, கடலைப்
பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக வறுத்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அந்த வாணலியில் பூண்டு, கறிவேப்பலை, வரமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு எள்ளு, சீரகம் ஆகியவற்றை ஒரு நிமிடம் வறுத்து இறக்கி,
அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு,
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய், பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக குளிர வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால்,
சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications