Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
லன்ச் பாக்ஸ் ரெசிபி: ருசியான.. கேரட் எலுமிச்சை சாதத்தை செய்வது எப்படி?
Carrot Lemon Rice Recipe In Tamil: காலையில் பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு சத்தான அதே சமயம் சுவையான ஒரு சமையலை செய்து கொடுக்க வேண்டுமா? இதுவரை நீங்கள் எலுமிச்சை சாதம் செய்திருப்பீர்கள்.
ஆனால் அந்த எலுமிச்சை சாதத்துடன் கேரட்டை துருவிப் போட்டு கேரட் எலுமிச்சை சாதத்தை செய்துள்ளீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை இதை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் எலுமிச்சை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை கழுவி குக்கரில் போட்டு, அதில் 1 கப்
நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு மற்றும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி,
குக்கரை மூடி 2விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும்
குக்கரைத் திறந்து, சாதத்தை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி,
வேர்க்கடலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின்
உப்பு, மஞ்சள் தூள் நன்கு கிளறி, இறக்கி எலுமிசை சாற்றினை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வதக்கிய பொருட்களை சாதத்துடன் சேர்த்து நன்கு ஒருசேர
கிளறிவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரட் எலுமிச்சை
சாதம் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications