Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
லால் பன்னீர்
பன்னீரைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை வீட்டில் செய்யலாம். பொதுவாக பன்னீர் சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதில் ஒரு ரெசிபி தான் லால் பன்னீர்.
பன்னீர் மிகவும் பிரபலமான உணவுப் பொருள் மற்றும் பலருக்கும் இது விருப்பமான உணவுப் பொருள் என்றும் சொல்லலாம். பன்னீரைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை வீட்டில் செய்யலாம். பொதுவாக பன்னீர் சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதில் ஒரு ரெசிபி தான் லால் பன்னீர். லால் என்றால் சிவப்பு. லால் பன்னீர் என்பது சிவப்பு நிற பன்னீர் ரெசிபி. இது காஷ்மீரி மிளகாய் மற்றும் தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு காரமான மற்றும் சற்று புளிப்பான ரெசிபி.

உங்களுக்கு லால் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லால் பன்னீரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பெரியது மற்றும் அரைத்துக் கொள்ளவும்)
* இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பன்னீரை எடுத்து, சோள மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காஷ்மீரி மிளகாயை தூளை நீர் சேர்த்து ஓரளவு விழுதாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
* பின் இஞ்சி விழுதை சேர்த்து கிளறி, அரைத்த தக்காளியை ஊற்றி பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், லால் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பன்னீரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.
* கரம் மசாலா பவுடரை சேர்ப்பது, நல்ல ப்ளேவரைத் தரும்.
* வேண்டுமானால் இஞ்சி விழுதிற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள் தக்காளியை சேர்ப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications