Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!!
குட்டு ஹி பூரி ரெசிபி பண்டிகை காலங்களில் கடைப்பிடிக்கும் விரதத்திற்கான உணவாகும். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்
பண்டிகைகளின் போது வட இந்தியர்கள் தாங்கள் கடைபிடிக்கும் விரதத்திற்காக குட்டி கி பூரி ரெசிபியை தயாரிப்பர். இந்த ரெசிபியை ஸ்பெஷல் மாவான பாப்பரையை கொண்டு தயாரிப்பர். இந்த பூரியை விரதத்தின் எதாவது சைடிஸ் கொண்டு சாப்பிடலாம்.
இதே மாதிரி சில விரத ரெசிபிகளாவன : சுகி ஆர்பி , சிங்கார கி பூரி, கட்டு கி சப்ஷி, விரத் வாலா ஆலு, ஆலு டெமாட்டர் சப்ஷி
பாப்பரை மாவு உங்களுக்கு பிசு பிசுப்பு தன்மை இல்லாமலும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகவும் பயன்படுகிறது. எனவே இதை பிணைவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. இதுவே ஆலு ஆட்டா மிகவும் பிசைவதற்கு கடினமாக இருக்கும்.
இங்கே வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து பூரி செய்ய வேண்டும். மாவை நன்றாக பிசைவதற்கு சரியான அளவு தண்ணீர் சேர்ப்பது மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் சேர்க்கவில்லை என்றால் மாவை பிசைவதற்கு கடினமாக இருக்கும்.
நீங்கள் எந்த இறைவழிபாடு விழாக்களான நவராத்திரி, ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்றவற்றிற்கு விரதம் இருக்க நினைத்தால் அதற்கு இந்த பூரி உணவு சிறப்பாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும் வீடியோ மூலமும் காணலாம்.
குட்டு கி பூரி வீடியோ ரெசிபி

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: மீனா பந்தரி
Serves: 7-8 பூரிகள்
-
வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து மசித்து கொள்ளவும்) - 1
படிக உப்பு (ராக் சால்ட்) - சுவைக்கு
பாப்பரை மாவு - 1கப்
தண்ணீர் - 1/6 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
-
1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.
3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.
4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.
7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.
9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.
12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.
- 1. தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும். மாவு ஒட்டும் பதத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2. பிசைந்த மாவு தேய்ப்பதற்கு கொஞ்சம் சரியான பதத்தில் இல்லா விட்டால் 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து அப்புறம் பயன்படுத்தவும்.
- 3. உருளைக்கிழங்குக்கு பதிலாக ஆர்மியை பயன்படுத்தலாம்.
- பரிமாறும் அளவு - 1 பூரி
- கலோரிகள் - 133 கலோரிகள்
- கொழுப்பு - 33 கிராம்
- புரோட்டீன் - 7 கிராம்
- கார்போஹைட்ரேட் - 27 கிராம்
- நார்ச்சத்து - 3 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் : குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி
1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.
3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.
4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.
7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.
9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.
12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications




























