Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் லட்டு ரெசிபி... இதை செஞ்சு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுங்க... சூப்பரா இருக்கும்!
Krishna Jayanthi Special Butter Laddu Recipe in Tamil: இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டது. கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே வீட்டில் மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக் கொள்ளும். வீட்டை அலங்கரிப்பது, குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம் போடுவது, இனிப்புகள் செய்வது, பூஜை, சடங்குகள் என வீடே கலகலப்பாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் இனிப்புகள் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஏனெனில் கிருஷ்ணர் ஒரு உணவுப்பிரியர்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்கு வழக்கமான இனிப்புகளை வைத்து வழிபடாமல் கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடும் போது அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். கிருஷ்ணருக்கு பிடித்த பொருள் என்று வரும்போது முதலிடத்தில் இருப்பது வெண்ணெய்தான். எனவே நீங்கள் செய்யும் இனிப்புகளில் வெண்ணெயை சேர்த்து செய்வது நல்லது.

இந்த பதிவில் வெண்ணெயை வைத்து சுவையான மற்றும் லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இந்த வெண்ணெய் லட்டு செய்ய குறைவான பொருட்களே போதும் மற்றும் இதனை சில நிமிடங்களில் செய்து விடலாம். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் லட்டை செய்து கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெண்ணெய் - 1 கப்
- மைதா மாவு - 2 கப்
- சர்க்கரை - 1.5 கப்
- பால் - 1/2 கப்
- ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- முந்திரி - 10 (உடைத்தது)
செய்முறை:
- முதலில் மைதாவை எந்த தூசியும் இல்லாமல் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பாலை முன்கூட்டியே கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடிகனமான கடாயில் வெண்ணெயை உருக்கி, முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே கடாயில் சலித்து வைத்த மைதா மாவு சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். மாவு நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
- மாவு வறுபட்டதும், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை கூட சேர்க்கலாம்.
- பின்னர் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளவும்.
* இந்த கலவையைச் சூடாக இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, நடுவில் ஒரு முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
- முந்திரிக்கு பதில் பாதாம் வைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- லட்டுகள் ஆறியதும் பூஜையின் போது வைத்து கிருஷ்ணரை மகிழ்ச்சியாகி வழிபடுங்கள்.
- பூஜை முடிந்ததும் காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
- பால் ஊற்றி செய்வதால் இதை விரைவில் சாப்பிட்டு விடுவது நல்லது.



Click it and Unblock the Notifications