Latest Updates
-
சனிபகவான் திரிகிரக யோகத்தின் போது நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் -
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது -
வரதட்சணை கொடுமை: திருமணமான 7 ஆண்டுகளில் நடக்கும் மரணங்கள்! உங்கள் மகளைக் காக்க இந்த சட்டங்கள் தெரியுமா? -
இந்தியா-லண்டன் வரை 11 நாடுகள் வழியாக சென்ற உலகின் நீண்ட பயணத்தின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா? -
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? புதிய சட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ! -
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும் -
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அமிர்தமா இருக்கும் -
வெயில் கொடுமையா? வீட்டை ஜில்லுனு வச்சுக்க இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், பணமும் தேடி வரும்! -
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண் பிற பெண்கள் மீது ஆசை கொள்வதற்கு இந்த 5 விஷயங்களில் ஒன்றுதான் காரணமாம்
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க
Kovai Special Arisi Paruppu Sadam Recipe In Tamil: தற்போது கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ரெசிபிக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு வேளை சமையலையும் சட்டென்று சிம்பிளாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி விரைவில் சமையலை முடிக்க வேண்டுமானால், ஒன்-பாட் ரெசிபிக்களை ட்ரை செய்ய வேண்டும். இந்த ஒன்-பாட் ரெசிபிக்களுள் நிறைய உள்ளன. அதில் கோவையில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் அரிசி பருப்பு சாதம்.
இந்த அரிசி பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் அவரது அம்மா செய்து கொடுக்கும் அரிசி பருப்பு சாதம் ரெசிபியை செய்து காட்டியுள்ளார். முக்கியமாக இந்த அரிசி பருப்பு சாதத்திற்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் பொரியலையும் செய்து காட்டியுள்ளார்.

உங்களுக்கு செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் அரிசி பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் அரிசி பருப்பு சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி பருப்பு சாதம் செய்வதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
* தக்காளி - 2 (பெரியதாக நறுக்கியது)
* சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* அரிசி - 1/2 கிலோ
* துவரம் பருப்பு - 150 கிராம்
* இடித்த மிளகு, சீரகம் - சிறிது
* இடித்த பூண்டு - சிறிது
* துருவிய தேங்காய் - சிறிது
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியலுக்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
* கத்திரிக்காய் - 4
* உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் 1/2 கிலோ அரிசி மற்றும் 150 கிராம் துவரம் பருப்பை
நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
குறைவான தீயில் வைத்து நன்கு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை
கழுவி சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் இடித்த மிளகு, சீரகம்
மற்றும் பூண்டு பற்களை தூவி, அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு கிளறினால், சுவையான கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்
தயார்.
* அதன் பின் பொரியலுக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூட்னதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் சதுரத் துண்டுகளாக நறுக்கிய கத்திரிக்காய் மற்றும்
உருளைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு, காய்கறிகள்
சுருண்டு வரும் வரை கிளறி இறக்கினால், கத்திரிக்காய் உருளைக்கிழங்கு
பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











