பிரியாணி சுவையை மிஞ்சும் கொத்தமல்லி புலாவ் ரெசிபி... செஞ்சு பாருங்க... வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க...

Posted By:

Kothamalli Pulao Recipe in Tamil: பொதுவாக கலவை சாதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவைதான். இந்த வகையான கலவை சாதங்கள் செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் சுவையானது, அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு மதிய உணவாக இது செய்து கொடுக்கப்படுகிறது.

எவ்வளவு நாட்கள்தான் இந்த சாதங்களையே குழந்தைகள் சாப்பிடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக வேறு வகையான சாதங்களை செய்து கொடுக்கும் போது குழந்தைகள் அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட வித்தியாசமான சாதங்களில் ஒன்றுதான் கொத்தமல்லி புலாவ்.

Kothamalli Pulao Recipe How to Prepare Kothamalli Pulao

இந்த கொத்தமல்லி புலாவ் செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பதிவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொத்தமல்லி புலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து புதினா
- 5 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 6 பல் பூண்டு
- 4 ஏலக்காய்
- 5 கிராம்பு
- அரை ஸ்பூன் மிளகு

புலாவ் செய்ய:

- 2 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- ½ நறுக்கிய குடை மிளகாய்
- 1 நறுக்கிய உருளைக்கிழங்கு
- 1 நறுக்கிய கேரட்
- 5 நறுக்கிய பீன்ஸ்
- 4 ஸ்பூன் பட்டாணி
- 3 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் உப்பு
- 1½ கப் பாஸ்மதி அரிசி, 20 நிமிடங்கள் ஊறவைத்தது
- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

- முதலில் மசாலா தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாடியில் 1 கப் கொத்தமல்லி, சிறிது புதினா, 5 பச்சை மிளகாய், 1 அங்குல இஞ்சி மற்றும் 6 பல் பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

- இதனுடன் 1 அங்குல இலவங்கப்பட்டை, 4 ஏலக்காய், 5 கிராம்பு மற்றும் ½ தேக்கரண்டி மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து தனியாக வைக்கவும்.

- ஒரு குக்கரில், 2 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும். பின்னர் 1 ஸ்பூன் சீரகம், 1 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் ½ குடைமிளகாய், 1 உருளைக்கிழங்கு, 1 கேரட், 5 பீன்ஸ் மற்றும் 4 ஸ்பூன் பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- காய்கறிகள் நன்கு வேகும் வரை வதக்கவும்.

- காய்கறிகள் வெந்ததும் அதில் அரைத்து வைத்திருந்த மசாலை சேர்க்கவும்.

- பின்னர் 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

- தண்ணீர் கொதி வந்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசி, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

- பின்னர் விசில் போட்டு மூடி 2 விசில் அல்லது அரிசி நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

- விசில் அடங்கியதும் மூடியைத் திறந்தால் வீடே மணக்கும் சுவையான கொத்தமல்லி புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, April 4, 2025, 17:43 [IST]
Desktop Bottom Promotion