Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
Konkani Style Karamani Kulambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? சப்பாத்தி, பூரிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் செய்து போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான அதேசமயம் சூப்பரான ஒரு சைடிஷை செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த கோவா ஸ்டைல் காராமணி மசாலாவை செஞ்சு பாருங்க. கோவா என்றாலே பொதுவாக கடல் உணவுகள்தான் மிகவும் பிரபலமானவையாக இருக்கும். ஆனால் அங்கு சில சைவ உணவுகளும் மிகவும் பிரபலமாகும். அதில் ஒன்றுதான் இந்த கொங்கணி காராமணி குழம்பு.

இது சாதம், தோசை, சப்பாத்தி மற்றும் பூரி என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும். உங்களுக்கு கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவா ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் காராமணி
- 3 கப் தண்ணீர்
- தேவையான அளவு மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
அரைக்க வேண்டியவை:
- 1/2 கப் தேங்காய்
- 5 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் மல்லி விதை
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- சிறிய துண்டு புளி
- தேவையான அளவு தண்ணீர்
தாளிப்பதற்கு:
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 3 பல் நறுக்கிய பூண்டு
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் காராமணியை நல்ல மணம் வரும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த காராமணியை தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து பிரஷர் குக்கரில் போடவும். 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், வர மிளகாய், மல்லி விதை, சீரகம், புளி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- வேகவைத்த காராமணியுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மசாலா ஒன்றோடொன்று சேரும் வரை 8 முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- ️ ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- ️ பின்னர் கறிவேப்பிலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- ️ இந்த தாளிப்பை குழம்பின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
-️ சூடான தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications