Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
ஒருடைம் கடலை பருப்பும், வேர்க்கடலையும் வெச்சு இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
Kolar Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கக்கூடிய ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலைக் கொண்டு செய்யக்கூடிய கோலார் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கர்நாடகாவின் கோலார் பகுதியில் மிகவும் பிரபலமான சட்னி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோலார் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோலார் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வேர்க்கடலை சேர்த்து வறுத்து, மிக்சர் ஜாரில் வறுத்த
பருப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, நறுக்கிய தக்காளி, சீரகம்,
கறிவேப்பிலை, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை ஜாரில் உள்ள பருப்புடன் சேர்த்து, சிறிது
உப்பு தூவி, நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீரை ஊற்றி கிளறி, அடுப்பை
அணைத்தால், சுவையான கோலார் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











