Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்
கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
பாயாசம் அனைவருக்குமே பிடித்த ஒன்று. பண்டிகை அல்லது விழாக் காலங்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக பாயாசம் இருக்கும். அதே சமயம் மாலை வேளையில் கூட சிலர் பாயாசத்தை செய்து சாப்பிடுவார்கள். அத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கேரளா மட்டை அரிசி பால் பாயாசம். இது கேரளாவில் மிகவும் ஸ்பெஷலானது.

கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். இந்த கேரளா மட்டை அரிசியைக் கொண்டு பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். முக்கியமாக இதை ட்ரை செய்த பின்னர் எப்படி இருந்தது என்று உங்களின் அனுபவத்தை எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரளா மட்டை அரிசி - 1/8 கப்
* பால் - 4 கப்
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் கேரளா மட்டை அரிசியை மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.
* பின் அதை நீரில் நன்கு கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்...



Click it and Unblock the Notifications