Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
கமகமக்கும்.. கீரனூர் காளான் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Keeranur Mushroom Biryani Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரத்துவிட்டதா? அப்படியானால் விடுமுறை நாளில் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் கீரனூர் காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த பிரியாணி தெருவே மணக்கும் வகையில் நல்ல மணத்துடன் இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த பக்குவத்தில் பிரியாணி செய்தால், பின் இந்த ஸ்டைலில் தான் எப்போதும் பிரியாணி செய்வீர்கள். பேச்சுலர்கள் கூட இந்த பிரியாணியை செய்யலாம்.

உங்களுக்கு கீரனூர் காளான் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரனூர் காளான் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 50 கிராம்
* இஞ்சி - 50 கிராம்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 4
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 100 மிலி
* வெங்காயம் - 4 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* காளான் - 400 கிராம் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரியாணி மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பால் - 2 கப்
* சுடுநீர் - 7 கப்
* சீரக சம்பா அரிசி - 1 கிலோ (20 நிமிடம் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
பிரியாணி மசாலாவிற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* பட்டை - 2 இன்ச்
* பிரியாணி இலை - 1
* முந்திரி - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா,
கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஈரமில்லாத மிக்சர் ஜாரில் பிரியா மசாலாவிற்கு கொடுத்த
மிளகு, சீரகம், சோம்பு, மல்லி, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை,
முந்திரி, காஷ்மீரி வரமிளகாய், கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூளை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய காளானை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பிரியாணி மசாலாவை சேர்த்து வதக்கி, 2 கப் தேங்காய்
பாலை ஊற்றி கிளற வேண்டும்.
* பின்னர் அதில் 7 கப் சுடுநீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும்,
அதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, நீர் ஓரளவு
சுண்டியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, குறைவான
தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான கீரனூர் காளான்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











