Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வீட்டுல கீரை இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க...
Keerai Pakoda Recipe In Tamil: தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் சமயத்தில் வீட்டில் நல்ல மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். உங்கள் வீட்டில் கீரை இருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான பக்கோடாவை செய்யுங்கள்.
இந்த கீரை பக்கோடா ஒரு சிறந்த ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த கீரை பக்கோடாவை எந்த கீரையைக் கொண்டும் செய்யலாம். குறிப்பாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரைக்கீரை/சிறுகீரை - 1 கைப்பிடி
* உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* அதேப் போல் உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
அதைத் துருவி நீரில் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் நறுக்கிய கீரை, துருவிய உருளைக்கிழங்கு
ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய
இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
பொதுவாக நீர் சேர்க்க தேவையில்லை. ஒருவேளை மிகவும் வறண்டு இருந்தால்,
லேசாக நீரைத் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள
கலவையை சிறிது எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான கீரை பக்கோடா தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications