Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
1 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த தொகையலை செஞ்சு பாருங்க... 1 வாரத்துக்கு இட்லி, தோசைக்கு வைச்சு சாப்பிடலாம்...!
Karuveppilai Thogayal Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான சட்னி செய்யாமல் புதிதாக ஏதாவது சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலை கொண்டு ஒரு அட்டகாசமான தொகையலை செஞ்சு பாருங்க. அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் தொகையலை செய்யுங்கள். இப்படி கறிவேப்பிலை தொகையல் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இது இட்லி,, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை தொகையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை தொகையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 10 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- அரை ஸ்பூன் வெல்லம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் கப் புதினா
- கால் கப் கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 10 வர மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் புளிச்சாறு, ½ டீஸ்பூன் வெல்லம், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் பெருங்காயம், வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், புளி சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலேயே வதக்கவும்.
- வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
- உப்பு, வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பான துவையலாக அரைக்கவும்.
- அரைக்கும்போது தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மேலும் சேர்க்கலாம்.
- பின்னர் இதை கிண்ணத்திற்கு மாற்றவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும் இது அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











