Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
1 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த தொகையலை செஞ்சு பாருங்க... 1 வாரத்துக்கு இட்லி, தோசைக்கு வைச்சு சாப்பிடலாம்...!
Karuveppilai Thogayal Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான சட்னி செய்யாமல் புதிதாக ஏதாவது சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலை கொண்டு ஒரு அட்டகாசமான தொகையலை செஞ்சு பாருங்க. அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் தொகையலை செய்யுங்கள். இப்படி கறிவேப்பிலை தொகையல் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இது இட்லி,, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை தொகையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை தொகையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 10 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- அரை ஸ்பூன் வெல்லம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் கப் புதினா
- கால் கப் கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 10 வர மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் புளிச்சாறு, ½ டீஸ்பூன் வெல்லம், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் பெருங்காயம், வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், புளி சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலேயே வதக்கவும்.
- வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
- உப்பு, வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பான துவையலாக அரைக்கவும்.
- அரைக்கும்போது தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மேலும் சேர்க்கலாம்.
- பின்னர் இதை கிண்ணத்திற்கு மாற்றவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும் இது அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications