Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இட்லி பொடியை ஒருவாட்டி இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..
Karuppu Ulunthu Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி பொடியை ஸ்டாக் வைத்துக் கொள்வீர்களா? அதுவும் எப்போதும் வீட்டில் தான் இட்லி பொடியை செய்து வைத்துக் கொள்வீர்களா? ஆனால் தற்போது தீர்ந்துவிட்டதா? புதிதாக இட்லி பொடியை அரைக்க வேண்டுமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று இட்லி பொடியை செய்யாமல், ஒருமுறை கருப்பு உளுந்து கொண்டு இட்லி பொடியை செய்யுங்கள்.
இப்படி இட்லி பொடி செய்யும் போது, அந்த இட்லி பொடி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் இட்லி பொடியை விட இப்படி இட்லி பொடி செய்தால், இதுவரை இட்லி பொடியை விரும்பி சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி பொடியானது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கருப்பு உளுந்து இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உடைத்த கருப்பு உளுந்து - 250 கிராம்
* பொட்டுக்கடலை - 125 கிராம்
* கடலைப் பருப்பு - 125 கிராம்
* சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 15
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உடைத்த
கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நல்ல மணம்
வந்து, நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து, அதை மற்றொரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை
சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து இறக்கி,
பொட்டுக்கடலையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து,
அவற்றையும் நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை
கடலைப்பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியின் சூட்டில் வரமிளகாயை போட்டு, 2 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த கடலைப் பருப்பு கலவையை சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து,
கொரகொரவென்று அரைத்து, ஏற்கனவே அரைத்த பொடியுடன் சேர்த்து நன்கு
கலந்து, குளிர வைத்து, பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக்
கொண்டால், சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications











