Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம்
கார்த்திகை தீபத்தன்று பலரும் தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பார்கள். அதில் பொரியுருண்டை, வடை, மாவிளக்கு, அப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கார்த்திகை தீபம் வரப்போகிறது. அந்த கார்த்திகை தீபத்தன்று பலரும் தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பார்கள். அதில் பொரியுருண்டை, வடை, மாவிளக்கு, அப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வருட கார்த்திகை தீபத்தன்று ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பலகாரம் செய்ய நினைத்தால், நெய் அப்பம் செய்யுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியைக் கொண்டது.

இப்போது கார்த்தை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி அல்லது இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
* அவல் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 சிட்டிகை
* சமையல் சோடா - 2 பெரிய சிட்டிகை
* துருவிய அல்லது பொடியாக்கப்பட்ட வெல்லம் - 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
* நெய் - அப்பம் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவலை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கழுவி, மிக்ஸர் ஜாரில் போட்டு, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி விட வேண்டும். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். எனவே அரைக்கும் போது அதிக நீரை சேர்த்து விடாதீர்கள்.
* பிறகு அரைத்த மாவை குறைந்தது 7 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் அப்பம் நன்கு மென்மையாக இருக்கும். பின் அந்த மாவில் சமையல் சோடா சேர்த்து கிளறி, 10 நிமிடம் அப்படியே வையுங்கள்.
* அதன் பின்பு பணியார கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* பின் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, தீயைக் குறைத்து, மூடி வைத்து வேக வையுங்கள்.
* 2-3 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அப்பத்தை திருப்பிப் போடுங்கள். அப்பம் நன்கு வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு ஸ்பூனின் பின்புறத்தைக் கொண்டு குத்திப் பாருங்கள். மாவானது ஸ்பூனில் ஒட்டாமல் இருந்தால், அப்பம் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்போது சுவையான நெய் அப்பம் தயார்.
குறிப்பு:
* அப்பத்திற்கான மாவு மிகவும் கெட்டியாக இல்லதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கெட்யான மாவு, அப்பத்தை கடினமாக்கிவிடும்.
*வேண்டுமானால், அரைக்கும் போது, மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயை சேர்த்து கொள்ளலாம்.
* மாவை தயாரித்த பின் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்தால், அப்பம் ருசியாக இருக்கும்.
* உங்களுக்கு வேண்டுமானால் அப்பம் தயாரிக்கும் போது நல்லெண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாக பயன்படுத்தலாம்.
* அப்பம் மிகவும் மென்மையாக இருக்க வேண்டுமானால், அரிசி மற்றும் பருப்புக்களை 5 மணிநேரம் ஊற வையுங்கள்.



Click it and Unblock the Notifications