Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சளி, இருமலில் இருந்து விடுபட கற்பூரவள்ளி இலை வெச்சு இப்படி ரசம் செஞ்சு குடிங்க.. டக்குன்னு சரியாயிடும்....
Karpooravalli Rasam Recipe In Tamil: தற்போது பனி அதிகம் கொட்டுவதால், நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சளி, இருமலுக்கு நிறைய மருந்து மாத்திரைகளை எடுப்பது மட்டுமின்றி, சளியை வெளியேற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒருசில மூலிகைகளை எடுத்து வந்தால், சளி விரைவில் முறிந்துவிடும். அதுவும் சளியை முறிப்பதில் கற்பூரவள்ளி இலை மிகவும் சிறந்தது.
கை வைத்தியத்தில் இந்த கற்பூரவள்ளி இலையின் சாறு சளிக்காக பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இதன் சாற்றினை குடிக்க பிடிக்காவிட்டால், அந்த கற்பூரவள்ளி இலையைக் கொண்டு ரசம் வைத்து சாப்பிட்டால், சளி விரைவில் சரியாகும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி இலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி இலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கற்பூரவள்ளி இலை - 10-15
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6- பல்
* தக்காளி - 6-7
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி,
கற்பூரவள்ளி இலை, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கற்பூரவள்ளி இலை விழுதை
சேர்த்து, 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, நுரைக்கட்டும் வரை
கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கற்பூரவள்ளி
இலை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications