Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கற்பூரவல்லி இலையை இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்!
Karpooravalli Chutney Recipe in Tamil: மழைக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். பெரும்பாலான வீடுகளில் இருக்கும் சளியை விரட்டும் பொருட்களில் முக்கியமானது கற்பூரவல்லி இலை. எனவே கற்பூரவல்லி இலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசை போன்றவற்றிலிருந்து வைத்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும். சரி வாங்க கற்பூரவல்லி இலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- கற்பூரவல்லி இலை - 12 அல்லது 15
- தேங்காய் - ½ மூடி
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பூண்டு - 6 அல்லது 8 பல்
- பச்சை மிளகாய் - 2
- வர மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 12 அல்லது 15
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- கற்பூரவல்லி இலைகளை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக
அலசி மண் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
எடுத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தண்ணீரில் அலசி
சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு
சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- அதனுடன் சீரகம், மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய், புளி,
தோலுரித்து வைத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக
வறுக்கவும்.
- பின் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்த கொத்தமல்லி இலை மற்றும்
கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
- கடைசியாக தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பை
சேர்த்து அரைத்து எடுத்தால் சளியை விரட்டும் ஆரோக்கியமான கற்பூரவல்லி
சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை மற்றும் சாதம் என அனைத்திற்கும் ஏற்றதாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications