Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
கர்நாடகா ஸ்பெஷல் உச்செலு சட்னி... இந்த சட்னியை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Karnataka Special Uchellu Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி சசெய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொஞ்சம் எள் உள்ளதா?
இதுவரை நீங்கள் எள்ளை முறுக்கு அல்லது வேறு நொறுக்குத்தீனிகளில் சேர்த்துதான் சாப்பிட்டிருப்போம். அந்த எள்ளை வைத்து சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், இன்று அதை முயற்சி செய்து பாருங்கள். இந்த உச்செலு சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு உச்செலு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உச்செலு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 3 ஸ்பூன் எள் விதைகள்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 3 வரமிளகாய்
- 2 முதல் 3 பல் பூண்டு
- 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
- 1 சிட்டிகை சர்க்கரை
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 வர மிளகாய்
செய்முறை:
- உச்செலு சட்னி செய்ய, முதலில் எள் விதைகளை ஒரு கடாயில் மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும். எள் ஒருபோதும் தீய்ந்து விடக்கூடாது, இல்லையெனில் சட்னி கசந்து விடும்.
- சட்னியில் போட்டு அரைப்பதற்கு முன்பு சிறிது நேரம் குளிர்விக்க வாணலியை ஒதுக்கி வைக்கவும்.
- பின்னர் மிக்சியில் துருவிய தேங்காய், பூண்டு, வரமிளகாய், கொத்தமல்லி, சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
- பின்னர் வறுத்த எள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாகத்தான் இருக்க வேண்டும். எனவே சிறிது தண்ணீர் மட்டும் சேர்க்கவும்.
- மிக்ஸியில் இருக்கும் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயை குறைந்த தீயில் வைத்து ஓரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் , கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயைச் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டினால் உச்செலு சட்னி ரெடி.
- இந்த உச்செலு சட்னி கர்நாடகாவில் பிரபல உணவுகளாக இருக்கும் அக்கி ரொட்டி, ஜோவர் ரொட்டி போன்றவற்றுடனும் நம்முடைய இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











