Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் ரெசிபி... வழக்கமான லெமன் சாதத்தை விட இது சூப்பராக இருக்குமாம்...!
Karnataka Chitranna Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பது லெமன் சாதம்தான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே லெமன் சாதத்தை எத்தனை நாட்கள்தான் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.
இந்த நிலையில் லெமன் சாதத்தையே வேறுவிதத்தில் செய்து கொடுப்பது அவர்களுக்கு புதிய சுவையைக் கொடுக்கும். கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் செய்து கொடுப்பது எளிதாகவும், புதிய சுவையாகவும் இருக்கும். கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் சித்ரான்னம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உணவு கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். அங்குள்ள அனைத்து கடைகளிலும் இது பிரதானமாக கிடைக்கும். இந்த பதிவில் இந்த கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதத்தை எப்படி செய்யலாமென்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சமைத்த சாதம் - 2 கப்
- எலுமிச்சைச்சாறு - 4 ஸ்பூன்
- கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 3 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- நறுக்கிய வெங்காயம் - அரை கப்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- அதன்பின் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு நன்றாக பொரிந்ததும் அதில் 1 ஸ்பூன் உளுந்து மற்றும் 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- அடுத்து, 3 டீஸ்பூன் வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கருகாமல் சில
நொடிகள் வதக்கவும்.
- அதன்பின் பச்சை மிளகாயை நறுக்கி மற்றும் இரண்டு சிவப்பு மிளகாய்
மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி சேர்க்கவும்.
- இப்போது கறிவேப்பிலை சேர்க்கவும்.
- இப்போது 1/2 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு மென்மையாகும்
வரை வதக்கவும். பின்னர் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்க்கவும்.
- அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு
சேர்க்கவும்.
- அனைத்தும் நன்கு வதங்கியவுடன் இதில் எலுமிச்சைச்சாறை
சேர்க்கவும்.
- இப்போது இதில் கொத்தமல்லி தலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- ஏனெனில் எலுமிச்சைச்சாறு கொதிப்பது அதில் கசப்பை அதிகரிக்கும்.
- இப்போது இதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு அதை 30 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
அப்போதுதான் மசாலாவின் சுவை சாதத்தில் முழுவதுமாக இறங்கும்.
- இப்போது சுவையான கர்நாடகா சித்திரான்னம் ரெடி! இதனை உருளைக்கிழங்கு
பொரியல், தேங்காய் சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால்
அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications





