Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
ஈவ்னிங் நேரத்துல காராமணியை வெச்சு இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்...
Karamani Vada Recipe In Tamil: தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழை பொழியும் போது, அதுவும் ஈவ்னிங் நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். அப்படி தோன்றும் போது, பெரும்பாலும் வடை, பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவோம்.
இன்று நீங்கள் காபி, டீ குடிக்கும் போது ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், வழக்கமாக செய்யும் பருப்பைக் கொண்டு வடை செய்யாமல், காராமணியைக் கொண்டு வடை சுடுங்கள். இந்த காராமணி வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு காராமணி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காராமணி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காராமணி - 1 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு கொதிக்க வைத்த சுடுநீரில் போட்டு மூடி
வைத்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, காராமணியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற
வைத்த காராமணியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடல் 1/2 டீஸ்பூன் சோம்பு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த காராமணியை எடுத்துக் கொண்டு,
அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி, தட்டையாக வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு,
முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்தையும் வடைகளாக தட்டிப் போட்டால், காராமணி வடை
தயார்.
Image Courtesy: WeRecipes



Click it and Unblock the Notifications










