Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
காரைக்குடி தக்காளி சட்னி: இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் பிரதானமான காலை மற்றும் இரவு உணவு என்னவென்றால் அது இட்லி மற்றும் தோசைதான். சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன்களை செய்ய அதிக நேரம் தேவைப்படும். இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சட்னிதான். ஆனால் வழக்கமான சட்னிகளுக்குப் பதிலாக புதுப்புது சட்னிகளை முயற்சி செய்யும்போது வீட்டிலிருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக சாப்பிடுவார்கள்.
சட்னி வகைககளில் காரைக்குடி சட்னிகளுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. காரைக்குடி என்றாலே அது சுவையான உணவுகளுக்கு பெயர் போன ஊராகும். காரைக்குடி உணவுகளுக்கென்று தனி அடையாளமும், சிறப்பும் உண்டு. அந்த வகையில் காரைக்குடி தக்காளி சட்னி இட்லி, தோசை மற்றும் பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். நாட்டு தக்காளியை பயன்படுத்தி இந்த சட்னியை செய்யும்போது அதன் சுவை கூடுதலாக இருக்கும். இந்த சுவையான தக்காளி சட்னியை எப்படி டக்குனு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
பழுத்த நாட்டு தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 3
காஷ்மீர் மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் பாதி எண்ணெயை சூடாக்கவும்.
- அதன்பின் கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், புளி ஆகியவற்றை நன்கு
வதக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
3-4 நிமிடங்கள் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இந்த
கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள்
தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை நன்கு குளிர வைக்கவும்.
- வதக்கிய மிளகாய், பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை கொரகொரவென
அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெங்காயம், பூண்டு கலவையை சேர்த்து மீண்டும் சில நொடிகள்
அரைக்கவும்.
- இப்போது வதக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து அதில் தேவையான
தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது மீதமுள்ள எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும். எண்ணெயை சூடாக்கி
கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து
சட்னியில் ஊற்றவும்
- இப்போது சுவையான காரைக்குடி தக்காளி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை
மற்றும் பொங்கலுடன் சேர்த்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications