சிக்கனை இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் சமைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Karaikudi Chicken Masala Recipe in Tamil: வகை வகையாய் சிக்கன் வைத்து சமைத்தாலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப அதன் சுவையை மாற்றி கொள்ளும். ஒவ்வொரு ஊரிலும் சேர்க்கப்படும் பொருட்களை வைத்து தான் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வரிசையில் காரைக்குடி செட்டிநாடு உணவுகளுக்கு என்று தனி விருப்பம் உண்டு. சரி வாங்க காரைக்குடி சிக்கன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

Karaikudi Chicken Masala Recipe How to Make Karaikudi Chicken Masala

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - ½ கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- கருவேப்பிலை - 2 கொத்து
- சோம்பு - ¼ தேக்கரண்டி
- சாம்பார் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க:

- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 6
- தனியா - 4 தேக்கரண்டி
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 4
- மராத்தி மொக்கு - சிறிது
- ஜாதிக்காய் - கால் பாகம்
- கருவேப்பிலை - 8 கொத்து
- தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

- சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஊற விடவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அதே போல் தக்காளியையும் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, மற்றும் ஜாதிக்காய் சேர்த்து சிவந்து மணம் வரும் வரை வதக்கவும்.
- பின் அதில் கருவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.
- அதில் சாம்பார் தூள், மிளகாய், மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.
- தண்ணீர் சேர்க்க தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் தண்ணீரே போதுமானதாக இருக்கும்.
- சிக்கன் அரைப்பதம் வெந்ததும் அரைத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
- கடைசியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான காரைக்குடி சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, June 27, 2025, 18:40 [IST]
Desktop Bottom Promotion