Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
ஆந்திர ஸ்பெஷல் கார கொழுக்கட்டை ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அப்பறம் அடிக்கடி செய்வீங்க...!
Kara Kolukattai Recipe in Tamil: தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பலகாரங்களில் ஒன்று கொழுக்கட்டை. பொதுவாக கொழுக்கட்டை பெரிதாக இனிப்பு அல்லது கார வடிவில் செய்யப்படும். ஆனால் இதனை சின்ன சின்னதாக ஆந்திராவில் அழகிய உருண்டை வடிவில் உப்பிண்டி என்ற பெயரால் சுவையாக செய்கிகிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே கொழுக்கட்டை செயல்முறைகள் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப வேறுபடுகிறது.தெலுங்கு பிராந்தியத்தின் செய்முறை பொதுவாக கொழுக்கட்டையுடன் ஒத்திருந்தாலும் , ஆனால் அதன் தோற்றம் மற்றும் சுவை முற்றிலும் வேறுபட்டது.

கடந்த தலைமுறையினரும், தமிழக எல்லைக்கு அருகில் வசிக்கும் ஆந்திர மக்களும் இன்னும் இந்த உப்பு அரிசி உருண்டைகளைத் தயாரிக்கிறார்கள். தெலுங்கு மக்கள் புளிப்பு, மெல்லிய மோர் கொண்டு தயாரிக்கிறார்கள். இந்த பதிவில் ஆந்திர ஸ்பெஷல் உப்பு கொழுக்கட்டையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- ஒன்றரை கப் அரிசி
- புளித்த மோர் - தேவையான அளவு
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய் நறுக்கியது
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது
- 1/3 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- அரிசியைக் கழுவி 5 மணி நேரம் புளித்த மோரில் ஊறவைத்து, பின்னர் மோரை வடிகட்டி, மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இறுதியாக பச்சை மிளகாயைச் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
- வறுத்த மசாலாவில், அரைத்த அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் ஒன்றாகக் கலந்து வேக வைக்கவும்.
- வேகவைத்த கலவையில், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, சூடான மாவை எடுத்து அமுக்கி, தட்டையான அரிசி மாவு கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
- இதை இட்லி பானையில் 15 நிமிடங்கள் இட்லி போலவே வேகவைக்கவும்.
- வெந்தவுடன் அடுப்பை அணைத்து சூடாக சாப்பிடவும். மாலை நேரத்தில் சாப்பிட இது ஒரு சூப்பரான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.



Click it and Unblock the Notifications