Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மொறுமொறுப்பான.. காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை எப்படி செய்யணும் தெரியுமா?
Kanchipuram Rava Masala Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ரவா தோசை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை ரவா தோசையை செய்வதாக இருந்தால், காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை செய்யுங்கள்.
இந்த ரவா மசாலா தோசை நன்கு மொறுமொறுவென்றும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு காஞ்சிபுரம் ரவா மசாலா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஞ்சிபுரம் ரவா மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 3/4 கப்
* மைதா - 3/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
சட்னிக்கு...
* வரமிளகாய் - 6 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு, அத்துடன்
அரிசி மாவு, மைதா மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 5 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, மூடி
வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் நீரில் ஊற வைத்த வரமிளகாய், புளி, பூண்டு,
மல்லி விதை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை கரண்டியால் நன்கு கிளறி, மாவை அள்ளி தோசைக்கல்லில்
ஊற்றி, தோசை ஓரளவு வெந்ததும், அதன் நடுவே அரைத்த சட்னியை சிறிது
வைத்து பரப்பி, பின் அதன் மேலே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து
மடித்து, பரிமாறினால் சுவையான காஞ்சிபுரம் ரவா மசாலா தோசை தயார்.
Image Courtesy: Wellcurve



Click it and Unblock the Notifications






