Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தோசைக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி செஞ்சு பாருங்க... எல்லோரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Kadappa Chutney Recipe in Tamil: வீட்டில் சமைப்பவர்களுக்கு சமைப்பதை விட பெரிய பிரச்சனையாக இருப்பது என்ன சமைக்கலாம் என முடிவு எடுப்பது தான். நம் வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ்-ன் புண்ணியத்தில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவும் காலை உணவும் இட்லி, தோசை தான்.
ஆனால் அதற்கு சைடு டிஷ்-ஷாக என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டியதும் கவலைபடக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. உங்க கவலைய கொஞ்சம் குறைக்க உதவுற வகைல ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி எப்படி செய்யறதுன்னு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- தக்காளி - 2 (நன்றாக பழுத்தது)
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை ஒன்று இரண்டாக வதக்க நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், உரித்து வைத்த பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
- அதில் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- கடைசியாக அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான கடப்பா சட்னி தயார்!



Click it and Unblock the Notifications











