தோசைக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி செஞ்சு பாருங்க... எல்லோரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!

Posted By:

Kadappa Chutney Recipe in Tamil: வீட்டில் சமைப்பவர்களுக்கு சமைப்பதை விட பெரிய பிரச்சனையாக இருப்பது என்ன சமைக்கலாம் என முடிவு எடுப்பது தான். நம் வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ்-ன் புண்ணியத்தில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவும் காலை உணவும் இட்லி, தோசை தான்.

ஆனால் அதற்கு சைடு டிஷ்-ஷாக என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டியதும் கவலைபடக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. உங்க கவலைய கொஞ்சம் குறைக்க உதவுற வகைல ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி எப்படி செய்யறதுன்னு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Kadappa Chutney Recipe How to Prepare Kadappa Chutney

தேவையான பொருட்கள்:

- கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- தக்காளி - 2 (நன்றாக பழுத்தது)
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.

- தக்காளியை ஒன்று இரண்டாக வதக்க நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு சேர்த்து வதக்கவும்.

- பின் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், உரித்து வைத்த பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

- அதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

- அதில் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.

- கடைசியாக அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.

- நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.

- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான கடப்பா சட்னி தயார்!

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 13, 2025, 20:14 [IST]
Desktop Bottom Promotion